வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாள்.. தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் உள்பட பல்வேறு பதட்டங்கள் காரணமாக தூத்துக்குடியில் இன்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சென்னையில் நடந்த போலீஸ் என்கவுண்டரில், வெங்கடேஷ் பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது சமாதி திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன்புரம் கிராமத்தில் உள்ளது.
நாளை பண்ணையாரின் நினைவு தினம் வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் விவகாரமும் சூடாகவே இருக்கிறது.
இத்தகைய தொடர் பதட்டங்களால் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 27ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவைப் பிறப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications