தூத்துக்குடியில் வீரன் அழகுமுத்துகோன் ஜெயந்தி விழா - 144 தடை உத்தரவால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

தூத்தூக்குடி: வீரன் அழகுமுத்துகோன் ஜெயந்தி விழாவை முன்னிடடு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை காலை முதல் 12ம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

இதுகுறித்து எஸ்பி துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோனின் 255வது ஜெயந்தி விழா தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் வைத்து நாளை 11ம் தேதி அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் யாதவர் சமுகத்தினர் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளை சேர்ந்த ஏராளமாணோர் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்துவர். இதனை முன்னிட்டு அசம்பாவிதம் நடக்காத வண்ணம் பலத்த பாதுகாபபுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு ஏடிஎஸ்பி, 11 டிஎஸ்பிகள் உள்பட மொத்தம் 700 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்ட எல்லையில் போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையும் நடந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ரோந்து, தலைவர்களின் சிலைகள், பிரச்சனைகுரிய இடங்கள் அவற்றில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் விழா அமைதியாக நடக்க ஏதுவாக சட்டம் மற்றும் ஓழுங்கை பராமரிக்கும் பொருட்டு கலெக்டரால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை காலை 5 மணி முதல் 12ம் தேதி காலை 5 மணி வரை இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி கட்டாலங்குளம் மற்றும் பிற பகுதிகளிலிருந்து அழகுமுத்துகோன் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வருபவர்கள் ஜோதி, கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள், மற்றும் இதர ஆயுதங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலம் கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+