ராமநாதபுரத்தில் இன்று முதல் ஒன்றரை மாதத்துக்கு 144 தடை உத்தரவு அமல்
ராமநாதபுரம் : இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அங்கு இன்று முதல் ஒன்றரை மாதத்துக்கு 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினமும், அக்டோபர் 28 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியும் நடைபெறுகிறது.

இதனால் பொது அமைதியை காக்கும் வகையில் 144 நடை உத்தரவு பிறப்பிக்குமாறு, ராமநாதபுரம் எஸ்.பி.மயில்வாகனன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனை ஏற்று ஆட்சியர் நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் இன்று (புதன்கிழமை) முதல் 14 ஆம் தேதி வரையிலும், அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும் வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதோ, பேரணி, ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவோ கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்ற பின்னரே கூட்டங்கள் போன்றவை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications