தமிழகத்தில் பரவும் டெங்கு: கோவை, விழுப்புரத்தில் 16 பேர் பாதிப்பு
கோவை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் கோவை, விழுப்புரத்தில் 16 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பல பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,தமிழகத்தில் அதன் பாதிப்பு குறைவாக இருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்

கோவையில் டெங்கு
இந்த நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 58 பேரில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்,ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அதிகாரி சவுந்திர வேல் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம்
இதனிடையே விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த 15 நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 5 பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் அனைவருக்கு முன்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் ஆய்வு
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ஊர்களுக்கு சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சுாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். காய்ச்சல் பரவியுள்ள பகுதிகளில் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications