கடலூர் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு! மழை வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 30 ஆனது!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன் தென்மேற்கு வங்க கடலில் புதுச்சேரி அருகே உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

cuddalore

இதனால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களா பலத்த மழையும் பயங்கர காற்றும் வீசியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நேற்று இரவு 7.30 மணி அளவில் புதுச்சேரி அருகே கரையை கடந்தது.

இதனிடையே கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரியகாட்டுப்பாளையம் அருந்ததிநகர் ஓடையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.

cuddalore12

மேலும் தமிழகத்தில் மழையினால் சுவர் இடிந்து விழுந்தும், மரம் முறிந்து விழுந்தும் ஒரே நாளில் 14 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+