For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்ட 16 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

புதுச்சேரி, ஆரியூரில் ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்ட மாணவ, மாணவிகள் 16 பேருக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்க நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

புதுச்சேரி: தட்டமைக்கு போடப்படும் தடுப்பூசியான ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவர்களில் 16 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியின் ஆரியூரில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் இன்று 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது.

 16 students gets side effects due rubella vaccination

இந்த ஊசி போடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. லேசான காய்ச்சல் வரலாம். யாரும் பயப்பட வேண்டாம். வாட்ஸ்-அப் உள்பட சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர்.

இந்நிலையில் புதுச்சேரி ஆரியூரில் ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்ட மாணவ, மாணவிகள் 16 பேருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டு மயக்க நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
rubella vaccination causes side effects in 16 students at puducherry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X