Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 17 பேர் தப்பியோட்டம்: 2 பேர் சிக்கினர்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 17 பேர் தப்பியோடினர். பட்டப்பகலில் அவர்கள் தப்பியோடிய சம்பவம், சீர்திருத்தப்பள்ளி காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், 2 சிறுவர்களை ஆத்தூர் அருகே போலீஸார் மடக்கி பிடித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே அரசினர் சிறுவர்களுக்கான சீர்திருத்த பள்ளி ஒன்று அமைந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த சிறுவர் இல்லத்தில், 27 சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

17 prisoners escaped from Chengalpattu home

சிறுவர்கள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 17 இளம் குற்றவாளிகள், அறையில் இருந்த இரும்பு ஜன்னலை உடைத்து, துணிகளைக் கயிறாகப் பயன்படுத்தி ஞாயிறன்று மதியம் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து, சிறப்பு இல்ல கண்காணிப்பாளர் அளித்த தகவலின்பேரில், செங்கல்பட்டு தாலுகா போலீஸார், சிறுவர் இல்லத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டனர். ஏ.எஸ்.பியின் உத்தரவின் பேரில் ஆத்தூர் வாழை தோட்டத்தில் பதுங்கியிருந்த இரண்டு சிறுவர்களை போலீஸார் மடக்கி பிடித்தனர், மற்ற சிறுவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

வடக்கு மண்டல ஐஜி மஞ்சுநாத் சிறார்கள் இல்லத்தை நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தப்பிச் சென்ற சிறுவர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக போலீஸாரிடம் ஆலோசனை செய்தார். தொடர்ந்து, சிறுவர்கள் இல்லத்தை பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறுவர்கள் தப்பி சென்ற பகுதிகளின் விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி. மஞ்சுநாத், நலத்துறையின் கீழ் சிறுவர்கள் இல்லம் செயல்படுவதால், போலீஸார் தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தில் செயல்பட முடியாது. எனினும், பதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பரிந்துரைப்பது மற்றும் ஆலோசனை வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.

தமிழகம் முழுவதும் குற்றவழக்குகளில் கைது செய்யப்படும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இங்கு அடைக்கப்படுகின்றனர். போதிய காவலர்கள் பணியில் இல்லாததன் காரணமாக, சிறுவர்கள் தப்பி ஒடியதாக கூறப்படுகிறது. சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி, அதிகளவு காவலர்களை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+