தகுதி நீக்கம் எதிரொலி.. 18 தொகுதிகளும் காலி.... அரசிதழில் வெளியிடப்பட்டது!
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் அறிவிக்க எடப்பாடி தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து தனது கவனத்துக்கு வராமல் நேரடியாக 18 பேரும் ஆளுநரை சந்தித்ததாக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் சபாநாயகர் தனபால் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பினார்.
Recommended Video
கால அவகாசம் வழங்கப்பட்டும் நோட்டீஸுக்கு பதில் அளிக்காததால் இந்திய அரசியலமைப்பு அட்டவணை 10-இன்படி 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 18 எம்எல்ஏக்களின் பட்டியலை சட்டசபை செயலர் பூபதி வெளியிட்டார்.
தகுதி நீக்கம் எதிரொலி.. 18 தொகுதிகளும் காலி.... அரசிதழில் வெளியிடப்பட்டது! https://t.co/zmcBAYhqwG pic.twitter.com/qtSaf9Du7u
— Oneindia Tamil (@thatsTamil) September 18, 2017
இந்நிலையில் 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் தமிழக அரசின் அரசிதழிலும் 18 தொகுதிகளிலும் காலியாக இருப்பதாக வெளியிடப்பட்டுள்ளது.