For Daily Alerts
Just In
காலியான 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும்: வைத்திலிங்கம்
தஞ்சாவூர்: காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என அதிமுக ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் இன்று தகுதி நீக்கம் செய்தார். இதையடுத்து 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.
அத்துடன் தமிழக அரசின் அரசிதழிலும் 18 தொகுதிகளும் காலி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கம், கட்சிக்கு துரோகம் செய்ததாலும், திமுகவுடன் தொடர்பு வைத்ததாலும் 18 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த 18 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத் தேர்தல் வரும் என்றார்.
Comments
English summary
AIADMK MP Vaidyalingam said that the 18 Assembly seats which was declaters as vacant will face the By-Elections Very Soon.
Story first published: Monday, September 18, 2017, 20:10 [IST]