18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு எதிரொலி.. ஆதரவாளர்களுடன் தினகரன் அவசர ஆலோசனை
Recommended Video
சென்னை: தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் தினகரன் உச்சகட்ட பரபரப்பில் உள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி கடந்த ஆண்டு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்தது.
இதையடுத்து இவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேர் சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஹைகோர்ட்டில் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகிறது.
எம்எல்ஏக்கள் தீர்ப்பு இன்று வெளியாவதால், 18 பேருடனும் அவசர ஆலோசனை நடத்த தினகரன் இன்று அழைப்புவிடுத்துள்ளார். தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அல்லது பாதகமாக வந்தால் எந்த மாதிரியான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.