இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விடுவிப்பு”
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 98 மீனவர்களில் 19 பேர் நேற்று விடுவிக்கப் பட்டுள்ளனர்.
இந்தியாவின் கடற்பகுதி காவலரான அபேக் இவர்களை அழைத்து வந்தார்.அவர்களுடைய நான்கு படகுகளும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
கடற்கரையோர காவல் படை மீனவர்களை மீனவ அமைப்பிடம் ஒப்படைத்தது.மார்ச் 26 ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னாரில் வைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படும் முன்பு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அவர்களில் ஒருவரான தங்கபாண்டியன் என்ற மீனவர் கூறியுள்ளார்.
விடுவிக்கப்பட்டவர்களில் 33 பேர் தஞ்சாவூர், 4 பேர் ஜெகதாபட்டினம், 16 பேர் காரைக்கால், 5 பேர் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications