ஒட்டன்சத்திரம் அருகே மயில்களை வேட்டையாடி நெருப்பில் சுட்டு சாப்பிட்ட 2 பேர் கைது
மயில்களை சுட்டு சாப்பிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே மயில்களை தீயில் சுட்டு சாப்பிட்ட 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேசியப் பறவையான மயிலை பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். மயிலை வேட்டையாடுதல், மாமிசத்தை உண்பது உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்குமே 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும். ஆனாலும் தமிழகத்தின் சில வனப்பகுதிகளில் மான், மயில் போன்றவைகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் உடல் வீரியத்திற்காக இந்த விலங்குகள் மற்றும் பறவையின் இறைச்சிகள் சாப்பிடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் முயல், மயில், மான், போன்றகள் கொல்லப்பட்டு வருவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்த வண்ணம் இருந்தது. அதனால் சின்னக்காம்பட்டி பகுதியில் அய்யலுார் வனத்துறை சிறப்பு குழுவினர் தேடுல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது 60 வயது மதிக்கத்தக்க 2 பேர் நாட்டு துப்பாக்கியால் மயிலை சுட்டு, வனப்பகுதியிலேயே தீ மூட்டி நெருப்பில் வாட்டி அதன் இறைச்சியை சாப்பிட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை கையும் களவுமாக பிடித்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இவர்கள் இருவரும் சின்னக்காம்பட்டியை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி, பாபு என்பது தெரியவந்தது. பழனிச்சாமி ஒட்டன்சத்திரத்தில் பைனான்ஸ் நடத்தி வரும் தொழிலதிபர் என்பதும், மயிலை வேட்டையாடி சுட்டு தருவதற்காக பாபு என்பவரை உடன் அழைத்து வந்ததாகவும் விசாரணையில் வெளிவந்தது.
இதனையடுத்து, மயில்களை சுடுவதற்காக வைத்திருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் அங்கிருந்த மயில் இறைச்சியை வனத்துறையினர் கைப்பற்றி ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications