ஸ்மார்ட் சிட்டி அமைப்பது எப்படி?- எம்ஜிஆர் பல்கலை கருத்தரங்கில் தெரிஞ்சிக்கலாம்!
Subscribe to Oneindia Tamil
இன்றைய மக்கள் தொகை, இடப் பிரச்சினை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த ஸ்மார்ட் சிட்டி தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் கட்டடக் கலைத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதன் தொடக்கவிழா 17.02.2017 அன்று, பல்கலைக்கழக தலைவர் ஏசிஎஸ் அருண்குமார் தலைமையில் நடந்தது.

சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் சென்குப்தா, பேராசிரியர் நம்பி அப்பாதுரை மற்றும் ஆர்க்கிடெக்ட் சங்கர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்கப்படுகிறது. இதில் பதிவாளர் பழனிவேலு , இயக்குநர் மீனாட்சி பார்த்தசாரதி, டீன் சுவேதா மற்றும் துறைத் தலைவர் ராதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications