சென்னையை தாக்கிய வர்தா புயலுக்கு 7 பேர் பலி
சென்னையை தாக்கிய வர்தா புயலுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையை தாக்கிய வர்தா புயல் தாக்குதல் எதிரொலியாக மரம் மற்றும் விளம்பர பலகைகள் விழுந்தும் வீட்டின் சுவர் இடிந்தும் சென்னை முழுவதும் 7 பேர் பலியாகினர்.
1994-ம் ஆண்டுக்குப் பின்னர் சென்னையை வலிமையான புயல் நேற்று தாக்கியுள்ளது. மணிக்கு 140கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.

வர்தா புயல் காரணமாக சுமார் 9,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 100க்கும் அதிகமான முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
சென்னையை சிதைத்த இந்த வர்தா புயலால் நகரமே பகலிலேயே இருளில் மூழ்கியது. இப்புயலுக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். மரங்கள் மற்றும் பெயர் பலகை சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். தெடர் மழையினால் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேரரும், மின்சாரம் தாக்கியதில் ஒருவரும் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications