திருச்சி அருகே பக்தர்கள் மீது பஸ் மோதி விபத்து - 2 பேர் பலி, 12 பேர் படுகாயம்
திருச்சி அருகே பக்தர்கள் கூட்டத்தில் தனியார் பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி: வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் தனியார் பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்தனர், 12 பேர் படுகாயமடைந்தனர்.
கிறிஸ்தவர்களின் புனித தல மான வேளாங்கண்ணியில் ஆண் டுப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பெருவிழா தொடங்கியுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வேளாங் கண்ணிக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
திருச்சி அருகே பக்தர்கள் பாதையாத்திரையாக சென்ற போது தனியார் பேருந்து ஒன்று மோதியது. இதில் பல பக்தர்கள் காயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயங்களூடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.