சேலம் அருகே அடுத்தடுத்து விபத்து.. அரசுப் பள்ளி தலைமையாசிரியர் உள்பட 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த சாலை விபத்தில் அரசப் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டது.

காரும் வேனும் மோதி அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதில் பெருந்துறை அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ராமசாமி என்பவர் உயிரிழந்தார். மேலும் சேலத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி கனகராஜ் என்பவரும் இந்த விபத்தில் சிக்கி பலியாகினர். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications