For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிக்கிய 3 கிலோதங்கக் கட்டிகள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 3 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

கடந்த வாரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி ரயிலில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் இளம்பெண் ஒருவர் பலியானார். 14 பேர் படுகாயமடைந்தனர்.

2 Kg gold seized in Central railway station

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து சென்னையின் முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப் பட்டுள்ளது. போலீசார் தீவிர சோதனைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, சென்ட்ரல் நிலையத்தில் பயணிகள் தகுந்த சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர். இந்நிலையில் இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரிடம் சுமார் 3 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பதைப் போலீசார் கண்டறிந்தனர்.

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்டு நடத்தப்பட விசாரணையில் அவருடைய பெயர் சத்திய நாராயணன் என்பதும், நவஜீவன் ரயிலைப் பிடிப்பதற்காக வந்த அவரிடம் தங்கக் கட்டிகளுக்கான உரிய ஆவணம் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
In Chennai, Central Railway station the police have seized 2 Kg of gold from a passenger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X