ஆம்பூர் அருகே பயங்கர விபத்து - கார் மீது டேங்கர் லாரி மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
ஆம்பூர் அருகே ஏற்பட்ட சாலைவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
ஆம்பூர்: ஆம்பூர் அருகே டேங்கர் டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி ரேணி குண்டா சாலையை சேர்ந்தவர் முருகேசன், வயது 60. இவர், மனைவி கோகிலா மற்றும் ராஜலிங்கம் என்பவர் உள்பட 4 பேருடன் சேலம் மாவட்டம் வெங்கடகிரி பகுதியில் உள்ள கோவிலுக்கு காரில் சென்று விட்டு இன்று அதிகாலை திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தார்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அடுத்துள்ள சின்ன கொமேஸ்வரம் என்ற பகுதியில் கார் சென்றபோது, முன்னாள் சென்ற டேங்கர் லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முருகேசன் சம்பவ இடத்தி லேயேயும், ஓட்டுனர் பிரேம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கொண்டுச் செல்லும் வழியிலேயேயும் உயிரிழந்தனர். ராஜலிங்கம் பலத்த காயங்களுடன் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேசான காயங்களுடன் கோகிலா உட்பட 2 பேர் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து, ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications