ஒட்டன்சத்திரத்தில் 2 பேரை 'சேஸிங்' செய்து மடக்கிய போலீஸ்... சுவாதி கொலை வழக்கில் தொடர்பு?
திண்டுக்கல்: இன்போசிஸ் பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் 2 பேரை ஒட்டன்சத்திரத்தில் போலீசார் சேஸிங் செய்து மடக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ந் தேதி பொறியாளர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இதனிடையே சுவாதியின் செல்போன் அழைப்புகள் அடிப்படையில் சந்தேக நபர்களைத் தேடி தனிப்படை போலீசர் திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ஒன்றிய அலுவலகம் முன்பு மோட்டார் சைக்கிளில் (டி.என்.37 பதிவு எண்) ஹெல்மெட் அணிந்து நேற்று பிற்பகல் 2 பேர் சென்றனர். அப்போது அவர்களை சாதாரண உடையில் இருந்த 2 நபர்கள் சேஸிங் செய்து மடக்கி போலீஸ் ஜீப்பில் ஏற்றினர்.
ஆனால் அந்த நபர்கள் ஜீப்பில் ஏற மறுத்து வாக்குவாதம் செய்தனர். பொதுமக்களும் பெரும் கூட்டமாக அங்கு திரண்டுவிட்டனர். அப்போதுதான், நாங்கள் போலீசார்; கொலை வழக்கு தொடர்பாக 2 பேரையும் விசாரணைக்கு அழைத்துச் செல்கிறோம் என்றனர்.
இதைத் தொடர்ந்து பொதுமக்கள் விலகிவிட்டனர். இந்த 2 நபர்களுக்கும் சுவாதி படுகொலையில் தொடர்பிருக்கலாம் என்பதற்காகவே போலீசார் கவனமாக பின் தொடர்ந்து வந்து மடக்கியதாக திண்டுக்கல் போலீசார் தெரிவித்தனர்.
அதாவது செல்போன் சிக்னல் மூலம் 2 பேரையும் தனிப் படையினர் சில நாட்களாக பின் தொடர்ந்து வந்து ஒட்டன்சத்திரத்தில் மடக்கியுள்ளனர். சுவாதி கொலை வழக்கில் ஏற்கனவே சென்னையி, திருச்சி மற்றும் கரூரில் 7 பேரை போலீசார் பிடித்துள்ளனர். சுவாதி கொலையில் இவர்களுக்கான தொடர்பு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications