சென்னை அருகே ரயில் மோதி 2 பேர் பலி - தண்டவாளத்தை கடக்கும் போது பரிதாபம்
சென்னை: சென்னை பெருங்களத்தூரில் மின்சார ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

படுகாயமடைந்தவர் குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை.
இவ்விபத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிட்டதட்ட பலமணி நேரங்களுக்குப் பின்னர் சேவை மீண்டும் துவங்கியது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் மின்சார ரயில்களில் அடிபட்டு இறப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரி்த்துக் கொண்டே இருக்கிறது. பெரும்பாலும் தண்டவாளங்களை கவனக்குறைவாக கடக்கும்போதுதான் இப்படிப்பட்ட விபத்துகள் நடக்கின்றன. அலுவலகம் செல்வோர்தான் பெரும்பாலும் இதில் இறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்போனை பேசிக் கொண்டே தண்டவாளத்தில் நடப்பது, கடப்பது, ரயில் வருகிறதா என்று கூடப் பார்க்காமல் அவசரமாக கடப்பது போன்றவைதான் இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கியக் காரணம். குறிப்பாக தாம்பரம் பகுதியில்தான் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன என்று ரயில்வே போலீஸார் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications