கருணாநிதி இல்லத் திருமணத்தில் "கை" வைத்த கில்லாடிகள்!! பணம் திருடிய இருவர் கைது
சென்னை : தேனாம்பேட்டையில் நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பணம் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், தமிழரசுவின் மகனுமான நடிகர் அருள்நிதியின் திருமணம், தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பங்கேற்க பல முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். திருமண நிகழ்ச்சியில் வேலை செய்வதற்காக ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இரு நபர்கள், சுப்புராயன் என்பவரது பணப்பையை திருடிக் கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்த சுப்புராயனும், பிற தொழிலாளர்களும் சேர்ந்து இரு நபர்களையும் விரட்டிப் பிடித்ததாக தகவல்கள் வெளியாகியுருக்கிறது.
பின்னர் அந்த இரு நபர்களும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் விசாரணையில் அவர்கள், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சாதிக்பாட்ஷா, மின்ட் தங்கச் சாலையைச்
சேர்ந்த பாஸ்கர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications