Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் ஆசிரியையின் கன்னத்தில் பளார் விட்ட பள்ளி மாணவன்.. கண்டித்ததற்கு பதிலடி!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் ஆசிரியையின் கன்னத்தில் பள்ளி மாணவன் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த மாணவன் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுசீலா (52) என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் பிளஸ்-2 வகுப்பில் வணிகவியல் பாடம் நடத்தி கொண்டு இருந்தார்.

2 student beat his teacher in Tiruppur

அப்போது இந்த வகுப்பில் படித்த மாணவர் சூரிய பிரகாஷ் என்பவர் புத்தகம், நோட்டு கொண்டு வரவில்லையாம். இதனால் அவர் தனியாக ஒரு பேப்பரில் ஆசிரியர் சொல்வதை குறித்து கொண்டு இருந்தார்.

இதைப்பார்த்த ஆசிரியை சுசீலா அந்த மாணவரை அழைத்து கண்டித்ததோடு, திடீரென கன்னத்திலும் அறைந்து விட்டதாக கூறப்படுகிறது. மற்ற மாணவ-மாணவிகள் முன்பு தாக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த மாணவர், பதிலுக்கு ஆசிரியை சுசீலாவின் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டாராம்.

மாணவன் அடித்ததில் ஆசிரியை சுசீலாவின் கண் கண்ணாடி உடைந்து அவருக்கு காயம் ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியை, வகுப்பறையில் நிகழ்ந்தது குறித்து தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதன்பின்னர், கல்வித்துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி, ஆசிரியை கன்னத்தில் அறைந்த மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு நீக்கி விட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+