கண்மாயில் மூழ்கி சகோதரிகள் உட்பட 3 பேர் பலி
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கண்மாயில் மூழ்கி இரண்டு சகோதரிகள் உள்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பாச்சேத்தியை அடுத்த தாலிக்குளத்தைச் சேர்ந்த விவசாயி முனியாண்டி. இவருக்கு சித்ராதேவி என்ற மனைவியும் மாலதி, 17 நிவேதா, 14 பாக்கியநாதன்,9 என்ற மூன்று குழந்தைகளும் உள்ளனர். சித்ராதேவியின் சகோதரி பாண்டிச்செல்வி தனது கணவர் சங்குபாண்டி, மகன்கள் சதீஷ்,5 மணிகண்டன்,3 ஆகியோருடன் பவசித்து வருகிறார். விடுமுறைக்காக தனது சகோதரி சித்ராதேவியின் வீட்டிற்கு வந்திருந்தார்.

நேற்று காலை சித்ராதேவி தனது குழந்தைகள் மாலதி, நிவேதா மற்றும் சகோதரி மகன் சதீஷ் ஆகியோருடன் மாரநாடு கண்மாய்க்குள் உள்ள தனது வயலுக்கு சென்றார். மதியம் 12.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பும் போது கண்மாய்க்குள் இறங்கி நடந்து சென்று விடலாம் என எண்ணி இறங்கியுள்ளார்.
சித்ராதேவியின் பின்னால் வந்த மாலதி, நிவேதா, சதீஷ் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பலியானார்கள். சித்ராதேவியின் அலறல் கேட்டு வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மாலதி, நிவேதா ஆகியோரது உடல்களை மீட்டனர்.

சதீசின் உடலை கண்டுபிடிக்க முடியாததால் மானாமதுரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையில் வீரர்கள் நான்கு மணி நேரம் போராடி சதீசின் உடலை மீட்டனர்.
மாலதி ப்ளஸ் டூ முடித்துள்ளார். நிவேதா திருப்பாச்சேத்தி அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். சதீஷ் பிச்சைபிள்ளையேந்தல் தொடக்கப்பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கிறார். நேற்று யாரும் பள்ளிக்கு போகாமல் தாயுடன் வயலுக்கு சென்று திரும்பும் போது பலியாகியுள்ளனர். திருப்பாச்சேத்தி இன்ஸ்பெக்டர் சுந்தர மாணிக்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்தை தாசில்தார் காசி பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். சமீபத்திய மழையாலும், வைகை ஆற்றில் நீர்வரத்தாலும் மாரநாடு கண்மாய் நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் நிரம்பி வரும் நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications