For Daily Alerts
Just In
2 குமரி மாவட்ட மீனவர்கள் கத்தாரில் சுட்டுக் கொலை
கன்னியாகுமரி: கத்தார் நாட்டில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களை கடல் கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் பெயர்கள் ஆண்டனி மற்றும் அருள் என்பதாகும். இவர்கள் குமரி மாவட்டம் இனயபுத்தன்துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். கத்தாரில் மீன் பிடிப்பதற்காக இவர்கள் சென்றிருந்தனர்.
நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஈரானைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் இருவரையம் பிடித்துச் சென்று பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
English summary
Sources say that 2 TN Fishermen have been shot dead in Qatar while they were fishing in mid sea.