சேலத்தில் பரிதாபம்... கழிவுநீர் தொட்டியில் மூழ்கிய 3 தொழிலாளர்கள்.. 2 பேர் மரணம்
சேலம் அருகே ரெட்டியூரில் வீட்டின் கழிவு நீர் தொட்டியில் தொழிலாளர்கள் 3 பேர் மூழ்கினர். கட்டுமான பணியிலுள்ள வீட்டின் கழிவுநீர் தொட்டியில் 3 தொழிலாளர்கள் தவறி விழுந்தனர். கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 3 பேரில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ரெட்டியூரில் ஒரு வீட்டின் கட்டுமானப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சரிந்து விழுந்த தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து மூழ்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications