சென்னை விமான நிலையத்தில் 20 கிலோ தங்கம் பறிமுதல்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 20 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 5 மணியளவில் துபாயில் இருந்து வந்த விமானத்தில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது துபாயில் இருந்து வந்த 3 பயணிகளிடம் சோதனை செய்தபோது, அவர்களிடம் 20 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பயணிகளிடமும் இருந்த 20 கிலோ தங்க கட்டிகளை புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து சென்னை வழியாக டெல்லிக்கு தங்கக் கட்டிகளை கொண்டு செல்ல இருந்தது பயணிகளிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
தங்கத்திற்கான இறக்குமதி வரி உயர்வு தங்கத்தின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களினால் வெளிநாடுகளில் இருந்து சென்னை, திருச்சி வழியாக தங்கத்தை கடத்துவது அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications