For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுச்சேரியில் வெங்கையா நாயுடுவிற்கு கருப்பு கொடி காட்ட முயற்சி.. 20 பேர் கைது

Google Oneindia Tamil News

Recommended Video

    வெங்கையா நாயுடுவிற்கு கருப்பு கொடி காட்ட முயற்சி.. 20 பேர் கைது-வீடியோ

    புதுச்சேரி: புதுச்சேரி சென்ற துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு கருப்பு கொடி காண்பிக்க முயன்ற 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் வழங்க வருகை தந்தார்.

    20 people have been arrested in Puducherry for try to show blac flag to Venkaiah Naidu

    சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை புதுச்சேரி விமான நிலையம் வந்த வெங்கையா நாயுடுவை, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றனர்.

    அங்கிருந்து கார் மூலம் கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் வளாகத்திற்கு வெங்கையா நாயுடு சென்றபோது, சிலர் அவரை நோக்கி கருப்பு கொடி காட்ட முயன்றனர்.

    [ அம்பத்தூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு.. குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு! ]

    புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், உள்ளூர் மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கைவிடுத்து அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீசார் 20 பேரை கைது செய்தனர்.

    English summary
    20 people have been arrested in Puducherry while they try to show blac flag to Venkaiah Naidu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X