மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை

Subscribe to Oneindia Tamil

மதுரை : மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள நடராஜர் நகர் விருத்தாசல தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (37). ரியல் எஸ்டேட் அதிபரான பார்த்திபன், மூணாறில் வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் கட்டுமான பணியை பார்வையிடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் மூணாறு புறப்பட்டுச் சென்றார் பார்த்திபன்.

பின்னர் மதுரை திரும்பிய பார்த்திபன், தனது வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப் பட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக உடனடியாக அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

In Madurai, 20 sovereign of jewels were stolen from a real estate businessman's house.

செய்தி சுருக்கம் :

மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கதவை உடைத்து மர்ம நபர்கள் 20 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+