மத்திய அரசுப் பணிகளில் 12% கூட “ஓ.பி.சி” வகுப்பினர் இல்லை!
சென்னை: மத்திய அரசு அலுவலகங்களில் ஓ.பி.சி என அழைக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை 12 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாக தெரிய வந்துள்ளது.
"மத்திய அரசு பணிகளில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்" என 20 ஆண்டுகளுக்கு முன் மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது. அதன்படி மத்திய அரசு பணி நியமனங்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னையைச் சேர்ந்த முரளீதரன் என்பவர் மத்திய அரசு பணிகளில் நியமிக்கப்பட்ட இதர பிற்பட்ட வகுப்பினர் எண்ணிக்கை குறித்த விவரம் கேட்டார்.

12 சதவீதத்திற்கும் குறைவு
அதற்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அளித்த தகவலில், "மத்திய அரசின் 40 அமைச்சகங்கள் மற்றும் சமூக நீதித்துறை உள்ளிட்ட 48 துறைகளில் 12 சதவீதத்திற்கும் குறைவானவர்களே ஓ.பி.சி பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
9000 பேர் மட்டுமே
மத்திய அரசின் ஏ, பி, சி மற்றும் டி பிரிவு பணியிடங்கள், 79 ஆயிரத்தில் 9,000 பேர் மட்டுமே ஓ.பி.சியைச் சேர்ந்தவர்கள். மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையில் 6,789 பேர் பணிபுரிகின்றனர்.
ஒருவர் கூட ஓபிசி கிடையாதாம்
இவர்களில் ஒருவர் கூட ஓ.பி.சியைச் சேர்ந்தவர்கள் இல்லை. இருப்பினும் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் வாரியாக நியமிக்கப்பட்ட ஓ.பி.சியினர் விவரம் தெரிவிக்கப்படவில்லை.
ராஷ்டிரபதி பவனில்
மேலும், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் பணியாற்றும் "ஏ" பிரிவு அதிகாரிகளில் ஒருவர் கூட ஓ.பி.சியில் இருந்து நியமிக்கப்படவில்லை.
முறையாக அமலாகவில்லை
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றுவோரில் 9 சதவீதத்தினரும், உயர் கல்வித்துறையில் பணியாற்றுவோரில் 5 சதவீதத்தினரும், ஓ.பி.சியை சேர்ந்தவர்கள். இதனால், மண்டல் கமிஷனின் பரிந்துரை முறையாக அமல்படுத்தப்படவில்லை என முரளீதரன் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications