திருவள்ளூர்: பணியின்போது உயிரிழந்த தலைமை காவலர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
பணியின்போது உயிரிழந்த திருவள்ளுர் தலைமை காவலர் உடல் அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
Recommended Video

திருவள்ளூர்: திருவள்ளூரில் பாதுகாப்பு ஒத்திகையின்போது மரணமடைந்த தலைமை காவலர் உடல், இன்று 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடலோர பகுதியில் நேற்று முதல் சாகர் கவாச் தீவிரவாத ஊடுருவல் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது. இதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மப்பேடு காவல் நிலைய தலைமை காவலர் கோபி என்பவர் பழவேற்காடு பகுதியில் ஒத்திகை பணியில் ஈடுபட்டிருந்தபோதுஅவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த சக காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, பரிசோதித்த மருத்துவர், காவலர் கோபி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த சின்னம்மாபேட்டைக்கு உடல் கொண்டு வரப்பட்டது.
பொது மக்களின் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது 7 காவலர்கள் மூன்று முறை வானத்தை நோக்கி சுட்டு மரியாதை செலுத்தினர். இறுதி ஊர்வலத்திலும் உடல் அடக்கம் நிகழ்ச்சியிலும் காவல் துறை சார்பில் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications