ஆர்.கே நகரில் இதுவரை ரூ.5.31 லட்சம் பறிமுதல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஆர்.கே நகரில் இதுவரை ரூ.5.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
சென்னை: ஆர்.கே நகரில் இதுவரை ரூ.5.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. மக்கள் கொடுத்த புகார்கள் மீதான நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் பேசியிருக்கிறது.
சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான தீவிர பிரச்சாரம் தற்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த தேர்தலில் அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. அதன்படி தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 232 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த புகார்களில் 227 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மேலும் ஆர்கே நகரில் தேர்தல் அறிவிப்பிற்கு பின் இதுவரை ரூ.5.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.