சிவகங்கை அருகே ஒரே நேரத்தில் மர்மமான முறையில் கொத்தாக இறந்த 25 மயில்கள்!!
சிவகங்கை அருகே ஒரே நேரத்தில் 25 மயில்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சிவகங்கை: மானாமதுரை அருகே ஒரே நேரத்தில் 25 மயில்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் வயல்வெளி பகுதயில் சந்திரன் என்ற 50 வயது விவசாயி 3 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்வெளியில் குத்ததைக்கு நெல் விவசாயம் செய்து வருகிறார்.
தற்போது அவர் விவசாயத்திற்காக நெல்விதைகளை துாவியுள்ளார். இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் 25 க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்மயில்கள் மர்மமான முறையில் கொத்தாக இறந்து கிடந்தன.

25 மயில்கள் இறப்பு
25 மயில்கள் இறந்த கிடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இறந்து கிடந்த மயில்களை குவித்து வைத்து விட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மாயமான மயில்கள்
பின்னர் இரவு 7 மணிக்கு அவர்கள்சென்று பார்த்த போது இறந்து கிடந்த மயில்களை யாருக்கும் தெரியாமல் மர்ம நபர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் விசாரணை
இதற்கு காரணமானவர்கள் மீது வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டனவா? அவற்றை கொன்றவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தினர்.

விவசாயி கைது
இதில் விவசாயி சந்திரன் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் புதைக்கப்பட்ட 25 மயில்களையும் உடற்கூறு ஆய்வுக்காக அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications