நெல்லை மாவட்டத்தில் 266 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க முடிவு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 266 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் மே மாதம் 16ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22ம் தேதி தொடங்குகிறது. இது 29ம் தேதி வரை நடக்கிறது. வாக்குப பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் 3931 வாக்கு சாவடிகள் உள்ளன. இந்த வாக்கு சாவடிகளில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து பதற்றமான வாக்கு சாவடிகளின் பட்டியலை தயாரித்துள்ளனர்.
ஜாதி, மதம் ரீதியாக பதற்றம் நிறைந்தவை, கடந்த தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகமாக இருந்தவை, ஆள் மாறாட்டம், கள்ள ஓட்டு போடுதல் ஆகியவை நடந்த வாக்கு சாவடிகள் என்ற அடிப்படையில் பதற்றமான வாக்குசாவடிகள் பட்டியலை தயார் செய்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் நடந்தும் அலுவலர்களுடன் நெல்லை ஆட்சியர் கருணாகரன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது, நெல்லை மாவட்டத்தில் 266 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்கு சாவடிகளில் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் வீடியோ பதிவு, வெப் கேமரா பதிவு, மைக்ரோ அப்சர்வர் நியமனம் உள்ளிட்டவற்றில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்காளர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் வாக்களிக்க வரும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications