மதுரையில் அதிரடி.. 27 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்.. நகருக்குள்ளேயே!
மதுரை: மதுரை நகரில் ஒரே நாளில் 27 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைவரும் நகருக்குள்ளாகவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த திடீர் கூண்டோடு இடமாற்ற உத்தரவால் மதுரை காவல்துறை கலகலத்துப் போயுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் இந்த இடமாற்றம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே 18 இன்ஸ்பெக்டர்களும், ஊரகப் பகுதியில் 10 இன்ஸ்பெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் 27 சப் இன்ஸ்பெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அனைவரையும் வேறு பகுதிகளுக்கு மாற்றாமல், நகருக்குள்ளாகவே இடமாற்றம் செய்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்பாக இடமாற்றம் செய்வது சாதாரண விஷயம்தான். ஆனால் நகருக்குள்ளாகவே இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது மதுரையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையமே இடமாற்றம் செய்யும். எனவே, அதற்கு முன்பாகவே நகருக்குள்ளாகவே இடமாற்றம் நடந்திருப்பதால் எதிர்க்கட்சிகள் முனுமுனுக்க ஆரம்பித்துள்ளன.












Click it and Unblock the Notifications