சென்னை அண்ணா பல்கலை. கழக விடுதியில் மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை!
சென்னை: சென்னை அண்ணா பொறியியல் பல்கலைக் கழக விடுதியின் மாடியில் இருந்து மாணவி சண்முக ப்ரீத்தா கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே கள்ளக்குறிச்சியில் எஸ்.வி.எஸ். மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் கூறப்பட்டாலும் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக ஆட்சியரிடம் புகார் கூறியதால் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் கிளப்பப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ண பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விடுதி மாணவி சண்முக பரீத்தா நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தையாவின் மகளான சண்முக ப்ரீத்தா, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செராமிக் பொறியியல் பிரிவில் பி.டெக் 2-ம் ஆண்டு பயின்று வந்தார். விடுதியின் மாடிக்கு நேற்று இரவு சென்ற ப்ரீத்தா அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவி சண்முக ப்ரீத்தாவின் உடலைக் கைப்பற்றி அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சண்முக ப்ரீத்தாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறி இருக்கின்றனர்.
இந்த தற்கொலை குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications