'புல் மப்பில்' ஓட்டுப் பதிவு எந்திரங்களுக்கு 'பாதுகாப்பு' வழங்கிய 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு ஏட்டையா
சென்னை: சென்னையில் ஓட்டு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் இருந்த இரு 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு ஏட்டையா ஆகியோர் கடும் போதையில் இருந்தனர். இதையடுத்து இந்த மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இங்கு காவல் பணியில் இருந்த போலீசார் போதையில் இருப்பதாக புகார்கள் வந்தன. கடந்த வாரம் போதையில் இருந்த ஒரு சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார், அங்கிருந்து மாற்றப்பட்டனர். அவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டதோடு லேசில் விட்டுவிட்டனர் அதிகாரிகள்.
இந் நிலையில் நேற்று இரவும் இங்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ஏட்டு புருஷோத்தமனும் போதையில் இருந்தபடி எந்திரங்களுக்கு 'பாதுகாப்பு' அளித்துக் கொண்டிருந்தனர்.
இங்கு திடீரென ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் மூவரும் மாட்டினர். ஐயா, வணக்கககங்ய்யா...யா..யா.. என குழறிய மூவரையும் அதிகாரிகள் மோந்து பார்த்தபோது அவர்கள் கடும் போதையில் இருப்பது உறுதியானது. இதையடுத்து அடையாறு துணை போலீஸ் கமிஷனர் கண்ணன் அவர்களளிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
வெளங்கும்...!












Click it and Unblock the Notifications