For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை விமான நிலையத்தில் சுற்றித்திரியும் புறாக்கள்: விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சிக்னல் கிடைக்காததால், சென்னை விமானநிலையத்தில் இருந்து மும்பை, டெல்லி செல்லும் 3 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் நுாற்றுக்கணக்கான புறாக்கள் சுற்றித்திரிவதால் விமானங்கள் பறக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

3 flights delayed due to Signal problem Chennai airport

சென்னை உள்ளாட்டு விமான நிலையத்தில் மும்பை, டெல்லி செல்லும் 3 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான புறாக்கள் சுற்றித்திரிவதால் சிக்னல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் டெல்லி, மும்பை செல்ல வேண்டிய பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

விமான நிலையத்தின் அலுவலங்களிலும், உணவகங்களிலும் சுற்றித் திரியும் புறாக்களை பிடிக்கும் பணியில் நரிக்குறவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பனிமூட்டம், மழை வெள்ளத்தால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது விமான நிலையத்தில் சுற்றித்திரியும் புறாக்களினால் விமானங்கள் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

English summary
3 flights were delayed by two hours after signal problem at Chennai airport on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X