தலைமை செயலாளர் அந்தஸ்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஹன்ஸ்ராஜ் வர்மா, ராஜ் துறை, நிரஞ்சன் மார்டி ஆகிய 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அந்தஸ்த்தில் தமிழக அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.
தமிழக அரசின் உள்துறை மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை கூடுதல் தலைமை செயலாளராக உள்ளார் நிரஞ்சன் மார்டி. அதே போன்று தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வருகிறார் பி.டபிள்யூ.சி. டேவிதார்.

கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் தலைமை செயலாளராக உள்ளார் ஹன்ஸ்ராஜ் வர்மா. இந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications