உளுந்தூர்பேட்டை அருகே.. 8 வாகனங்கள் மோதி மூவர் பலி: 55 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர். 55 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே நான்கு வழி அதிவேக சாலையில் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து, முன்னால் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதியது. அந்த பேருந்துக்கு பின்னார் வந்த 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதின.

அரசு பேருந்து, தனியார் பேருந்து, இரண்டு லாரிகள், 4 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் வாகனங்கள் நசுங்கின. இதில் இரண்டு கார் ஓட்டுனர்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார்களில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இரண்டு பேருந்துகளில் இருந்த 50 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்தடுத்த விபத்தின் காரணமாக சென்னை-திருச்சி நான்கு வழிச்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+