போலி நாகரத்தினக் கல்லை ரூ.3 கோடிக்கு விற்க முயற்சி - 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் ரூபாய் 300 கோடி மதிப்புள்ளது எனக்கூறி ரூபாய் 3 கோடிக்கு போலி நாகரத்ன கல்லை விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்படனர்.
தமிழகத்தில் இரிடியம் போன்ற ஏமாற்று வேலைகளில் சிக்கி பணத்தை இழப்பவர்கள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் பாம்பு உருவாக்குவதாக சொல்லி விற்கப்படும் நாகரத்தினக் கல் கொள்ளை.

அப்படி நாகரத்தினக் கல் ஒன்றின் விலை ரூ. 300 கோடி எனக்கூறி உங்களுக்காக ரூபாய் 3 கோடிக்கு தருகின்றோம் என்று போலி கண்ணாடியால் ஆன நாகரத்ன கல்லை விற்க முயன்றோர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி, கீரனூரில் இம்மோசடியில் ஈடுபட்ட கருப்பையா, மணிகண்டன், முருகன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். போலி நாகரத்தினக் கல் விற்பனை நடப்பதாக வந்த தகவலை அடுத்து நுண்ணறிவு குற்றப்பிரிவு போலீஸ் விரித்த வலையில் 3 பேரும் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications