நெல்லை மாவட்டம்: கடையநல்லூரில் மின்னல் தாக்கியதில் 3 பேர் பலி
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகே நேற்று மாலை மின்னல் தாக்கியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். இந்த சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடையநல்லூர் மேலக்கடையநல்லூர் கண்ணார் தெருவைச் சேர்ந்த முப்புடாதி என்பவரது மகன் விஜய் (14) 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் சின்னராஜ் (19), முருகன் மகன் மற்றொரு சின்னராஜ் (18) ஆகியோர் கடையநல்லூர் கருமாரியம்மன் கோவிலுக்கு மேல்புறம் உள்ள பெரியகுளத்தில் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது மின்னல் தாக்கியதில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 3 பேரும் உயிரிழந்தனர்.. தகவலறிந்த கடையநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மநாத பிள்ளை மற்றும் போலீஸார் விரைந்து சென்று உடல்களையும் மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications