ஏசியில் மின்கசிவு.. மூச்சுத்திணறி 3 பேர் பலியான பரிதாபம்.. கோயம்பேட்டில் பரபரப்பு
சென்னை: சென்னையில் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு 3 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு மேட்டுகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு கார்த்திகேயன் என்ற 8 வயது மகன் உள்ளார்.
அப்பகுதியில் அதிகாலை 3 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் புழுக்கம் தாளாமல் சரவணன் இன்வெர்ட்டரில் ஏசியை இணைத்து பயன்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து ஏசியை இன்வெர்டர் கருவி மூலம் இயக்கினர். இந்நிலையில் இன்று நீண்ட நேரம் ஆகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்ததையும் அறையில் இருந்து புகை வெளியேறியதையும் அக்கம்பக்கத்தினர் கவனித்தனர்.
[வாரி சுருட்டிய சுனாமி.. இந்தோனேஷியாவில் ஒரே இடத்தில் 1000 உடல்கள் புதைப்பு!! ]
இதையடுத்து கதவை தட்டினர். எனினும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
அப்போது அறையில் சரவணன், கலையரசி, கார்த்திகேயன் ஆகியோர் பலியாகியிருந்தது தெரியவந்தது. ஏசியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டதால் மூச்சுத் திணறி இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. அதிகாலை 5 மணிக்கு மின் இணைப்பு வந்த நிலையில் இன்வெர்ட்டரில் இயங்கி வந்த ஏசியில் அதிக லோடு தாங்காமல் மின் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.