இன்ஸ்டாகிராம் மோகம்... செல்ஃபியால் சோகம்! செங்கல்பட்டில் ரயில்மோதி 3 இளைஞர்கள் பலி
செங்கல்பட்டு: இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் அமர்ந்து செல்பி வீடியோக்களை பதிவு செய்து கொண்டிருந்த 3 இளைஞர்கள் விரைவு ரயில் மோதியதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
செங்கல்பட்டை அடுத்துள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியை சேர்ந்தவர்கள் அசோக்குமார்(24), பிரகாஷ்(17), மோகன் (17). நண்பர்களான இவர்கள் மூவரும் எப்போதும் ரயில்வே இருப்புப் பாதையில் அமர்ந்து செல்பி வீடியோக்களை பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வழக்கமாக வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் மாலை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மூன்றாவதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் இருப்புப் பாதையில் 3 பேரும் அமர்ந்து வீடியோக்களை பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லக்கூடிய விரைவு ரயில் 3 பேரும் மீதும் மோதியது.
இதில் படுகாயமடைந்த பிரகாஷ், மோகன், அசோக்குமார் ஆகிய மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே இருப்புப் பாதை போலீசார் மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications