சம்பத் கமிட்டி அறிக்கை எரிப்பு... 35 த.ம.மு.க.வினர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நீதிபதி சம்பத் கமிட்டியின் நகலை எரித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு பரமக்குடியில் போலீசாரின் துப்பாக்கி சூடு நடத்தது தொடர்பாக அரசின் சார்பில் நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழுவினர் பரமக்குடியில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது சரிதான் என்று அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.

இதனைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குபேந்திரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கருப்பசாமி, இளைஞரணி தலைவர் தேவபிரியன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் நீதிபதி சம்பத் குழுவினரின் விசாரணை அறிக்கை நகலையும், நீதிபதியின் உருவப்படத்தையும் திடீரென்று தீ வைத்து எரித்தனர். இதனையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 35பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications