தடையை மீறி “ஜல்லிக்கட்டு” – சிவகங்கையில் 36 பேர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரி அருகே உள்ள அ.காளாப்பூர், மு.சூரக்குடியில் மஞ்சுவிரட்டு நடத்தி, தடையை மீறி மாடுகளை அவிழ்த்து விட்டதாக 36 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிங்கம்புனரி அருகே அ.காளாப்பூரில் தடையை மீறி மாடுகளை அவிழ்த்து விட்டதாக கிராம நிர்வாக அலுவலர் சேகர் புகார் அளித்தார்.

இதனையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் காளாப்பூரைச் சேர்ந்த செல்வகுமார், மணி, சரவணன், தங்கம், ராமசாமி, சேவுகப்பெருமாள் உள்ளிட்ட 23 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் மு.சூரக்குடியில் தடையை மீறி மாடுகளை அவிழ்த்து விட்டதாக கிராம நிர்வாக அலுவலர் பாலுச்சாமி அளித்த புகாரின் பேரில் சின்னையா, அம்பலம், ராமசாமி உள்ளிட்ட 13 பேர் மீதும் எஸ்.வி.மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications