Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் நடத்தை விதி மீறல்... தமிழகத்தில் 3,793 வழக்குகள் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடந்து முடிந்த தமிழக லோக்சபா தேர்தலில் நடந்தை விதிகளை மீறியதாக 3,793 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-

தமிழகத்தில் மார்ச் 5-ந்தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அன்றிலிருந்து இதுவரை, பொது சுவர்களில் சுவரொட்டி ஒட்டுவது போன்ற விதிகளை மீறியதாக 2 லட்சத்து 8 ஆயிரத்து 845 புகார்கள் வந்தன. அவற்றின் அடிப்படையில் 2,904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் தமிழகமெங்கும் வாகன விதிகளை மீறியதாக 262 வழக்குகள், ஒலிபெருக்கி விதிகளை மீறியதாக 20 வழக்குகள், சட்டவிரோதமாக கூட்டம் நடத்தியதாகவும், பேசியதாகவும் 81 வழக்குகள், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் கொடுத்ததாக 90 வழக்குகளும், மேலும் சில விதிமீறல்கள் தொடர்பாக 436 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆக மொத்தத்தில் பல்வேறு தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 3,793 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+