ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கில் 3வது நீதிபதி நியமனம்… தலைமை நீதிபதி உத்தரவு
சென்னை: ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கில் 2 நீதிபதிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 3வது நீதிபதியாக நீதிபதி கிருபாகரனை தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
ராம்குமார் பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை பரமசிவம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் தனியார் மருத்துவர் தேவையில்லை என்று கூறினார். நீதிபதி ரமேஷ் தனியார் மருத்துவரை நியமிக்கலாம் என்று கூறினார். இவர்கள் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3வது நீதிபதியிடம் இந்த வழக்கு சென்றது.

ஆனால் யார் அந்த 3வது நீதிபதி என்று தெரியாமல் இருந்த சூழலில், இன்று காலை வழக்கறிஞர் விஜயேந்திரன் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுலிடம், 3வது நீதிபதியை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி கிருபாகரனை 3வது நீதிபதியாக நியமித்துள்ளார். மேலும் இன்று பிற்பகல் ராம்குமாரின் பிரேத பரிசோதனை குறித்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, இரண்டு நாட்களாக ராம்குமாரின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறுமா அல்லது நாளை நடைபெறுமா என்று இழுப்பும் பறிப்புமாக இருந்த நிலையில் இன்று ஒரு முடிவு பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications