மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து 4,500 பேர் மீட்பு: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் இதுவரை 4500 பேரை மீட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையால் சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு தரப்பில் பல்வேறு நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தனர். குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து வெள்ளநீர் சூழ்ந்த தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, பேசின் பாலம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 12 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் அதிகமான வீரர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். சுமார் 45 படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை 4500-க்கும் அதிகமானோர் மழை பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணிகளில் அரசு நிர்வாகத்திற்கு உதவியாக இருந்தனர்.
அதேபோல், தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவில் திருப்பதி நெல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய மீட்பு படை வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 4,500 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications