கோவை 13 வயது சிறுமி பலாத்கார வழக்கு – 4 பேரையும் விடுவித்து மகிளா கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் 13 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது கோவை மகிளா நீதிமன்றம்.

கோவை ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் 13 வயதானவர். இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

4 culprits released in the Rape case…

இதன் காரணமாக சிறுமி ராமநாதபுரத்தில் உள்ள தாய் வழி பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். இந்த கால கட்டத்தில் கவிதாவின் தாய்மாமனான ஒண்டிப்புதூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், அவரது நண்பரான ஓய்வு பெற்ற பாலசுப்பிரமணியம், பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்த கருப்பசாமி, ராமநாதபுரத்தை சேர்ந்த ராகம் கருப்பசாமி ஆகியோர் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக ராமநாதபுரம் போலீசில் புகார் கூறப்பட்டது.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கருப்பசாமி, ராகம் கருப்பசாமி ஆகியோரை கடந்த பிப்ரவரி அன்று கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நீதிபதி சுப்ரமணியன் முன்பு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி சுப்ரமணியன் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். கோபாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கருப்பசாமி, ராகம் கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றங்களை அரசு தரப்பு நிரூபிக்க தவறியதால் 4 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+