திருப்பூரில் தொழிலதிபர் மனைவியை கத்தியால் குத்தி நகையைப் பறித்துச் சென்ற 4 பேர் கைது
திருப்பூர்: அங்கேரிபாளையம் அருகே தொழில் அதிபர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய மனைவியை கத்தியால் குத்தி நகையை பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அங்கேரிபாளையம் காதர் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் ( 55). இவர் அந்த பகுதியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சைலஜா(50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கணவன், மனைவி இருவரும் கடந்த 9-ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த போது, முகமுடி அணிந்த 2 மர்ம நபர்கள் சந்திரனின் வீட்டுக்குள் திடீரென புகுந்தனர். அப்போது வீட்டில் இருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொடுக்கும்படி கேட்டனர். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் கூச்சலிட்டனர். அதனையடுத்து, மர்ம நபர்களில் ஒருவன் சைலஜாவை கத்தியால் குத்தினான். பின்னர், அவர்களிடமிருந்து மோதிரம், சங்கிலி, வளையல்கள், மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மர்ம நபர்களை பிடிக்க, காவல் ஆய்வாளர் சென்னகேசவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் திருப்பூர் புதிய பஸ்நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு 3 வாலிபர்கள் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த அலெக்சாண்டர் என்ற பாபு(26), மதுரை ஆரப்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த சிவா என்ற சிவக்குமார்(22), தேனி மாவட்டம் கோம்பை பூமரத்தெரு பகுதியை சேர்ந்த ரமேஷ்(24) என்பது தெரியவந்தது.
விசாரணையில், தொழிலதிபர் சந்திரனின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய மனைவியை கத்தியால் குத்தி அவரிடம் நகையை பறித்தது இவர்கள்தான் என்பது தெரிய வந்தது. இதில் அலெக்சாண்டர் என்பவன் சந்திரனிடம் கார் டிரைவராக வேலை பார்த்துள்ளான்.
இதைதொடர்ந்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலேசார் அவர்களிடமிருந்து 12 பவுன் நகை மற்றும் செல்போனை மீட்டனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications